ரூ.2.78 லட்சம் கொடுத்து 2 நாட்களுக்கு முன் வாங்கிய பைக்.. அதிவேகமாகச் சென்று விபத்தில் சிக்கி இளைஞர் பலி..!

0 8011
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இரண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு பைக்கை வாங்கி 2 நாட்களே ஆன நிலையில், ஆர்வக் கோளாறில் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இரண்டே முக்கால் லட்ச ரூபாய்க்கு பைக்கை வாங்கி 2 நாட்களே ஆன நிலையில், ஆர்வக் கோளாறில் அதிவேகமாக ஓட்டிச் சென்று விபத்தில் சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்ற அந்த மாணவர், கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தந்தையை இழந்த பிரசாந்த்தை ஒரே மகன் என்பதால் தாய் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

மகன் கேட்கிறானே என்று, 2 நாட்களுக்கு முன்புதான் 2 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கொடுத்து கேடிஎம் பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த பைக்கை தொழுதூரிலுள்ள நண்பர்களிடம் காண்பிப்பதற்காக தலைக்கவசம் அணியாமல், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

வளைவு ஒன்றில் வேகத்தைக் குறைக்காமல் அவர் திரும்பியதாகக் கூறப்படும் நிலையில், நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments