விமானத்தில் பறக்க வேண்டும் என்ற காப்பகக் குழந்தைகளின் கனவை நனவாக்கிய தன்னார்வலர்கள்

0 2692
கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தன்னார்வலர்கள் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

கோயம்புத்தூரில் உள்ள காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக தன்னார்வலர்கள் அவர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அந்த காப்பகத்துக்குத் தேவையான உதவிகளை செய்துவரும் தன்னார்வலர்கள், அங்குள்ள குழந்தைகளின் ஆசைகளை கேட்ட போது, வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அங்கிருந்த 15 குழந்தைகளை தன்னார்வலர்கள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றனர். சென்னையில் உள்ள தனியார் விளையாட்டு அரங்கில் குழந்தைகளை விளையாட வைத்து விட்டு, இரவு மீண்டும் விமானம் மூலம் அவர்களை கோயம்புத்தூருக்கு அழைத்து செல்ல உள்ளதாக தன்னார்வலர்கள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments