உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை ஹங்கேரி வழியாக அழைத்து வருகிறது இந்திய அரசு

0 2652
உக்ரைன் நாட்டில் இருந்து இந்திய மாணவர்களை ஹங்கேரி வழியாக அழைத்து வரும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

உக்ரைன் நாட்டில் இருந்து இந்திய மாணவர்களை ஹங்கேரி வழியாக அழைத்து வரும் பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

போர் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதற்கட்டமாக இந்திய மாணவர்களை பேருந்து மூலம் உக்ரைன் எல்லையை கடந்து ஹங்கேரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் புடாபெஸ்ட் நகரில் இருந்து மாணவர்களை விமானம் மூலம் தாயகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் எல்லை வழியாக ருமேனியா வந்த மாணவர்கள் இந்தியாவிற்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments