இந்தியாவில் மருத்துவக் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும் ; பிரதமர் மோடி

0 2165
இந்தியாவில் மருத்துவக் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும்

உலகளவில் மருத்துவர்களுக்கானத் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, நம் நாட்டில் மருத்துவக் கல்வி நிறுவனங்களை அதிகரிக்க தனியார் அமைப்புகள் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கான அறிவிப்புகள் குறித்த வலையரங்கை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், இந்திய மாணவர்கள், மருத்துவ கல்வி கற்க மொழி வேறுபாடுகளை கடந்து சிறிய சிறிய நாடுகளுக்கு செல்வதால், நம் நாட்டிலேயே கல்வி நிறுவனங்களை அதிகரிக்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றார்.

அதற்குத் தேவையான நிலங்களை கையகப்படுத்த மாநில அரசுகள் கொள்கைகளை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தினார். ஆயுஷ் மருத்துவம் உலகளவில் அங்கீகாரம் பெறத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், உலக சுகாதார மையம், முதன் முதலாக பாரம்பரிய மருத்துவத்துகான மையத்தை இந்தியாவில் தொடங்குவதை நினைத்து பெருமை கொள்வதாகத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments