உக்ரைனுக்குப் பாதுகாப்புத் துறை உதவியாக 4500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஒப்புதல்

0 1651

உக்ரைனுக்குப் பாதுகாப்புத் துறை உதவியாக 4500 கோடி ரூபாய் வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் மூன்றாம் நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு நிதியுதவி வழங்கும் கோப்புக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். அதில் போர்க்கருவிகள் வாங்கவும், ராணுவப் பயிற்சிக்கும் கல்விக்கும் உக்ரைனுக்கு 2627 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உக்ரைனுக்கு 1873 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கவும் வெளியுறவு அமைச்சகத்துக்கு அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments