டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், மார்ச் 2ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் - வானிலை மையம்

0 1860

தமிழகத்தில் மார்ச் 2ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மார்ச் 2ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் ஒன்றாம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள்  மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments