நாயை கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

0 3611
நாயை கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்து சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே, நாயை ஒருவர் கொடூரமாக தாக்கி தரதரவென இழுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வீரகேரளம் பகுதியிலுள்ள, கேஆர் கே நகரில் சாலையில் தெரு நாய்கள் அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நாய்கள் வாகன ஓட்டிகளையும், குடியிருப்பு வாசிகளையும் தொந்தரவு செய்வதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாலு என்பவர், குட்டிகள் ஈன்றிருந்த தாய் நாய் ஒன்றை கொடூரமாக தாக்கி சாலையில் இழுத்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில், பாலு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments