இந்தியர்கள் மீட்பு பணி தொடங்குகிறது

0 2084

இதனிடையே, உக்ரைனில் இருந்து போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்கள் வெளியேறும் நிலையில், அது குறித்த பரபரப்பான காட்சிகள் வெளியாகி உள்ளன.

குண்டுவெடிப்பு சப்தங்களுக்கு இடையே இந்தியர்கள் அச்சத்துடன் வாகனங்களிலும், நடை பயணமாகவும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.

போலந்து எல்லை வழியாக வெளியேற விரும்பும் இந்தியர்கள் ஷெஹ்னி - மேடைகா  எல்லையை கடக்கும்படி அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல், மேற்கு உக்ரேனின் செர்னிவ்ட்சி நகரில் இருந்து ருமேனியா எல்லை வழியாகவும் மாணவர்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை உதவியுடன் இந்திய மாணவர்கள் தங்களது உடமைகளுடன் பேருந்துகளில் புறப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments