5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

0 2432

கோவையில் 5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

மதுக்கரை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா, கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன், ரெஜினா பானுவுடனும், இளைய மகன், சாதிக் பாஷாவுடனும் வசிக்கின்றனர். இந்நிலையில், இளைய மகன் தனக்கு தெரியாமல் தாய் ரெஜினா பானுவை சந்தித்ததால் ஆத்திரமடைந்த சாதிக் பாஷா, சிறுவனை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து ரெஜினாவிற்கு அனுப்பியுள்ளார்.

இதனை ஆதாரமாக வைத்து ரெஜினா அளித்த புகாரின் பேரில் சாதிக் பாஷாவை கைது செய்த போலீசார் சிறுவனை மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments