ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் தீவிரம்

0 1663
ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக பனியில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க இந்திய ராணுவத்தினர் களமிறங்கியுள்ளனர்.

இடைவிடாது பெய்து வரும் பனிப்பொழிவால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில், சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

பனிமூடிய சாலைகளுக்கு மத்தியில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் நவ்யுக் சுரங்கப்பாதையில் சிக்கியது. பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை போலீசார் பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments