அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதரத் தடைகள் விதிப்பு

0 3158
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதரத் தடைகள் விதிப்பு

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதரத் தடைகளை அறிவித்துள்ளன.

ரஷ்யாவின் 6 நிதி அமைப்புகள் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது. ரஷ்யா தனது ராணுவத்துக்கு நிதியை வழங்கமுடியாதபடியும் அதன் யூரோ மற்றும் பவுண்டு வர்த்தகம் முடக்கப்பட்டு டாலரை சார்ந்து நிற்கும் நிலை ஏற்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரிட்டனும் ரஷ்யாவின் 5 வங்கிகளுக்கு தடை அறிவித்துள்ளது.ஐரோப்பிய யூனியனும் பொருளாதாரத் தடைகளைஅறிவித்து ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் 200 நாடுகளில் 11 ஆயிரம் நிதி அமைப்புகளை கட்டுப்படுத்தும் கூட்டமைப்பான ஸ்விப்ட்டில் இருந்து ரஷ்யா நீக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஆயினும் ஸ்விப்ட்டில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments