உக்ரைனில் உள்ள தமிழர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

0 1275

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் மற்றும் அங்கு புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்களுக்கான உதவி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ளதால், அங்குள்ள 5,000 தமிழக மாணவர்களை மீட்க அவர்களின் உறவினர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

அவ்வாறு சிக்கித் தவிப்பவர்கள் குறித்த விவரங்களை தமிழக அரசின் அவசர கட்டுப்பாடு மைய எண்ணான 1070 ஐ தொடர்பு கொண்டோ அல்லது அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகதை தொடர்பு கொண்டோ, அல்லது புது டெல்லி பொதிகை இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உக்ரைன் அவசர உதவி மையத்தை தொடர்பு கொண்டோ தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments