பிரிட்டன் வங்கிகளில் 50ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் பரிவர்த்தணை செய்ய ரஷ்யர்களுக்கு தடை ; பிரிட்டன் அரசு

0 1767
பிரிட்டன் வங்கிகளில் 50ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் பரிவர்த்தணை செய்ய ரஷ்யர்களுக்கு தடை

பிரிட்டன் வங்கிகளில் 50ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் பரிவர்த்தணை செய்ய ரஷ்யர்களுக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை கண்டித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது. ரஷ்யா விமான நிறுவனம் Aeroflot, தொழில் நிறுவனங்கள், வங்கிகள், தன்னலக் குழுக்கள், மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளார்.

மேலும் லண்டன் நிதி அமைப்பில் இருந்து ரஷ்ய வங்கிகள் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான அனைத்து ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதின் கைகளில் படிந்துள்ள உக்ரைன் மக்களின் ரத்தக்கரையை ஒருபோதும் அவரால் சுத்தப்படுத்திக் கொள்ள முடியாது என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments