ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

0 3119
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று இரவு ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்றுமாலை கூடியது.இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

இந்தியர்களை உக்ரைனில் இருந்து அழைத்து வருவது தொடர்பாக இன்றுஇரவு ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments