உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் பதுங்கு குழிக்குள் பதுங்கியிருக்க அறிவுறுத்தல் - இந்திய தூதரகம்

0 1955

உக்ரைனில் சிக்கிய இந்தியர்கள் போர் விமானங்கள் மற்றும் குண்டு சத்தத்தை கேட்டால், உடனடியாக பதுங்குக் குழிகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவற்றில் பதுங்கியிருக்குமாறும், பதுங்கு குழிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை கூகுள் மேப் மூலம் கண்டுபிடித்துக் கொள்ளவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால், இந்தியர்கள் மீட்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களை பத்திரமாக மீட்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

உக்ரைனின் அண்டை நாடுகளாக பெலாரஸ், போலந்து நாடுளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments