மின்சாரம் தாக்கி துடித்த வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது

0 2122
மின்சாரம் தாக்கி துடித்த வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது

சென்னை அடுத்த ஆவடி அருகே, மின்சாரம் தாக்கி துடித்த வளர்ப்பு நாயை காப்பாற்ற முயன்ற 7 வயது சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

கண்ணப்பாளையம் மெயின் ரோட்டில் வசித்த பிரகாஷ் என்பவரின் வீட்டு வாசலில் இருந்த மின் கம்பம் சேதமடைந்தது. அதனை சீரமைக்க வந்த மின்வாரிய ஊழியர்கள் ஸ்டே வயரை வீட்டின் முன் இருந்த தடுப்பு வேலியில் கட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்கள் வீட்டு வளர்ப்பு நாய், ஸ்டே வயரில் உரசியதால் உடலில் மின்சாரம் பாய்ந்து துடித்துள்ளது. நாயை மீட்க முயன்ற பிரகாஷின் மகன் மித்து, மீதும் மின்சாரம் பாய்ந்ததால் அவன் தூக்கி வீசப்பட்டான்.

இதில், நாய் உயிரிழந்த நிலையில், சிறுவன் மித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments