உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சி

0 1994

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே சரிவைக் கண்டது. முற்பகல் 9:54 மணி அளவில் சென்செக்ஸ் 1946 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 286ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை நிப்டி 600 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 463ஆக இருந்தது. தொலைத்தொடர்பு, மோட்டார் வாகனம், வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குமதிப்பு 7 விழுக்காடு வரை சரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments