எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சிறைபிடிப்பு

0 1336

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

காங்கேசன் துறை கடற்பரப்பில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக்கூறி ஒரு படகையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

அதே போல் பருத்தித்துறை அருகே மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்த 13 மீனவர்கள் மற்றும்  ஒரு படகு என மொத்தம் 22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments