விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய பணியாளர் கைது

0 1697
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய பணியாளர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயியிடம் 30,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல் கொள்முதல் நிலைய பணியாளரை போலீசார் கைது செய்தனர்.

சில நாட்களுக்கு முன், பாண்டுகுடியில் உள்ள கொள்முதல் நிலையத்துக்கு 500 நெல் மூட்டைகளுடன் வந்த கணேசன் என்பவரிடம், அங்கிருந்த ஊழியர் ராம்ராஜ் மூட்டைக்கு 60 ரூபாய் வீதம் 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

அப்போது, கணேசனிடம் இருந்த 6,500 ரூபாயை வாங்கி கொண்ட ராம்ராஜ், மீத தொகையை செலுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணேசன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார்.

அவர்கள் அளித்த ரசாயனம் தடவிய நோட்டுகளை ராம்ராஜிடம் அவர் கொடுத்த போது, மறைந்து நின்ற போலீசார் ராம்ராஜை கையும் களவுமாக கைது செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments