நிதி கையாடல் செய்ததாக பாரத் பே நிறுவனத்தின் நிறுவனர் அஷ்னீர் குரோவரின் மனைவி மீது நடவடிக்கை

0 2885

இந்தியாவில் நிதி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்கும் பாரத் பே நிறுவனத்தின் நிறுவனர் அஷ்னீர் குரோவரின் மனைவி நிதி கையாடல் செய்ததாக அந்நிறுவனத்தின் நிர்வாக குழுவால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாரத் பேயின் நிதி மேலாண்மை துறையை 2018 முதல் நிர்வகித்து வந்த மாதுரி ஜெயின் குரோவர், நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை அழகு சாதன பொருட்கள் வாங்கவும், வெளிநாடுகளுக்கு குடும்ப சுற்றுலா செல்லவும் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இவை அனைத்தும் பாரத் பேயின் நிர்வாக குழு நடத்திய தனிப்பட்ட தணிக்கையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மாதுரி குரோவர் பாரத் பே நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்குகளையும் ரத்து செய்வதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments