மெரினாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகள் மேலும் ஒருவாரம் காட்சிப்படுத்தப்படும் - தமிழக அரசு

0 1304

சென்னை மெரினா கடற்கரை சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குடியரசு தின விழாவின் 3 அலங்கார ஊர்திகள், பொதுமக்கள் பார்வைக்கு மேலும் ஒருவார காலம் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடியரசு தின விழாவில், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் 3 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு சென்னையில் நடைபெற்றது.

அதன் பின், பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் இந்த அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் அனுப்பபட்டது. கடந்த 20 ஆம் தேதி முதல் சென்னை மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்தியை ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments