திருநின்றவூர் நகராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெவ்வேறு வார்டுகளில் போட்டியிட்டு வெற்றி

0 2681

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருநின்றவூர் நகராட்சியின் வெவ்வேறு வார்டுகளில்  போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உட்பட 3 பேர் வெற்றி பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டில்  போட்டியிட்ட திமுக வேட்பாளர் தி.வை. ரவி 924 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரது மனைவி உஷாராணி 1வது வார்டில் போட்டியிட்ட நிலையில், அவர் 506 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதே போல, ரவியின் தம்பி சுரேஷ்குமாரும் 25வது வார்டில் போட்டியிட்டு 949 வாக்குகள் பெற்று வெற்றிக் கண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments