சுயேச்சை வேட்பாளர்கள் 6 பேர் திமுகவில் இணைந்ததால் வந்தவாசி நகராட்சியை கைப்பற்றியது திமுக

0 2433
வந்தவாசி நகராட்சியை கைப்பற்றியது திமுக

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர்களில் 6 பேர், திமுகவில் இணைந்ததால், வந்தவாசி நகராட்சியை திமுக கைப்பற்றியது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி 9 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 10 வார்டுகளிலும், அதிமுக 3 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2, 4, 5, 6, 12, 21 ஆகிய வார்டுகளில் வெற்றி பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ.வேலு மற்றும் வந்தவாசி திமுக எம்.எல்.ஏ அம்பேத்குமார் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனால், திமுக 15 இடங்களை பெற்று வந்தவாசி நகராட்சியை வசமாக்கியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments