சொகுசு கார்களை ஏற்றிச் சென்ற கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்.!

0 1322

போர்ச்சுகல், மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஷோர்ஸ் தீவில் ஒரு வாரமாக சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வோல்ஸ்வேகன் குழுமத்தின் போர்ஷே, அவுடி, பென்ட்லி உள்பட சுமார் 4 ஆயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் திடீரென தீ பற்றியது. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் முயற்சி கடந்த ஒரு வாரமாக நடைபெறுகிறது.

மின்சார கார்களின் லித்தியம் பேட்டரியில் தீப்பற்றி மளமளவென எரிந்து வருவதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் இழுவை படகுகள் களமிறக்கப்பட்டுள்ளன. கப்பலில் பற்றி எரியும் தீ மீது இழுவை படகுகள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments