முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.!

0 2299
சென்னையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சென்னையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தொண்டரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைதான  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் திமுக தொண்டர் ஒருவரை அதிமுகவினர் அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற விவகாரத்தில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

கடந்த 19 ஆம் தேதி தேர்தலன்று ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 110 பேர் மீது வழக்கு பதியப்பட்டது.

அதன் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் மீண்டும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments