ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் கோதுமை வழங்கிய இந்தியா.!

0 1779

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கிய கோதுமையுடன் சென்ற டிரக்குகள் பாகிஸ்தான் சென்றடைந்தன.

ஆப்கானிஸ்தானில் நிலவும் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்தியா பல்வேறு மனிதாபிமான உதவிகளைச் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிடமிருந்து கோதுமையைப் பெறுவதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து வந்திருந்த 26 டிரக்குகள் கோதுமையைச் சேகரித்துக் கொண்டு அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானைச் சென்றடைந்தன.

இந்த வாகனங்கள் பாதுகாப்பாக ஆப்கானிஸ்தான் சென்றடையும் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியா 50 ஆயிரம் டன் கோதுமையை வழங்குகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments