மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு.. புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் வியாழக்கிழமை மறுவாக்குப்பதிவு..!

0 2045

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில்  வியாழக்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

4-வது வார்டுக்குட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் போது திரையிடும் பகுதியில் பழுது ஏற்பட்டதாகவும், எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய பெல் நிறுவன பொறியாளர்கள் முயன்றும் இயலவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வரும் வியாழக்கிழமை 4-வது வார்டில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது.

வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படும் என்றும், தேர்தல் முடிந்த அன்றே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments