வடசென்னையில் சுயேட்சையாக போட்டியிட்ட கானா பாலா தோல்வி

0 3169

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வடசென்னையில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரபல பாடகர் கானா பாலா தோல்வியடைந்தார். 

கானா பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான கானா பாலா என்கிற பாலமுருகன், தமிழ் சினிமால் 300க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 72வது வார்டில் அவர் சுயேட்சையாக போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், கானா பாலா 6 ஆயிரத்து 95 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர், 8 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments