நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் பிரதிபலிப்பு இல்லை ; அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

0 2362
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் பிரதிபலிப்பு இல்லை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் என்பது மக்களின் பிரதிபலிப்பு இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கையில், தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்று தான் எனவும், இதன் மூலம் ஆளுங்கட்சி செயற்கையாக வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும் என்ற ஓ.பி.எஸ்., இந்த சூழ்நிலையிலும் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

இதற்கு முன் பல தோல்விகளை அதிமுக சந்தித்தாலும் அவற்றில் இருந்து மீண்டு வந்து வெற்றி பெற்றிருக்கிறது எனக் கூறியுள்ள ஓ.பன்னீர்செல்வம், மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்த ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும் வரை காத்திருக்குமாறு அதிமுகவினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments