முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு 15நாள் நீதிமன்ற காவல்..!

0 7042

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க ஜார்ஜ்டவுன் 15-ஆவது குற்றவியல் நீதிபதி முரளிகிருஷ்ணா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நடந்து முடிந்த வாக்குப்பதிவின் போது திமுக நிர்வாகி மீது தாக்குதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் ஜெயகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பட்டினப்பாக்கம் இல்லத்திலிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டார். அவரது வழக்கை விசாரித்த ஜார்ஜ்டவுன் 15-ஆவது குற்றவியல் நீதிபதி முரளிகிருஷ்ணா 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். மேலும் ஜாமீன் மனு நாளை விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments