தேர்தல் பிரசாரத்தின் போது காலில் விழுந்த கட்சி நிர்வாகி : பதிலுக்கு அவரின் காலை தொட்டு வணங்கிய பிரதமர்

0 1902

த்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது தனது காலைத் தொட்டு வணங்கிய கட்சி நிர்வாகிக்கு, அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவுறுத்திய பிரதமர், அந்த நிர்வாகியின் காலையும் தொட்டும் வணங்கினார்.

உன்னாவ் பகுதியில் நடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது பிரச்சார மேடையில் பாஜகவின் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் பிரதமருக்கு ராமர் சிலையை பரிசளித்தார்.

அப்போது அவர் பிரதமரின் காலைத் தொட்டு வணங்கிய நிலையில், தன்னுடைய பாதங்களை தொட வேண்டாம் என பிரதமர் மோடி சைகை காட்டினர். இதனை அடுத்து, யாரும் எதிர்பாரா வகையில் அவதேஷின் காலில் விழுந்து பிரதமர் வணங்கினார். இக்காட்சியை பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments