பிரிட்டன் ராணி எலிசபெத்துக்கு கொரோனா பாதிப்பு.! விரைவில் குணமடைய வேண்டி பிரதமர் மோடி டிவிட்

0 1680

கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள இங்கிலாந்து ராணி எலிசபெத் விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை செய்வதாக தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

95 வயதான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்புக்கும் கொரோனா காலத்து கட்டுப்பாடுகளுக்கும் ராணி ஆளாகியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான ஜலதோஷம் இருப்பதாகவும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களில் அவர் வழக்கமான பணிகளுக்கு திரும்பி வருவார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments