தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மீது குறி, தாவூத் இப்ராஹின் தாக்குதல் திட்டம் ? - என்.ஐ.ஏ தகவல்

0 2689

ந்தியாவில் உள்ள பிரபலங்கள் மீது தாக்குதல் நடத்த சிறப்பு குழு ஒன்றை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் அமைத்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டெல்லி மற்றும் மும்பையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளை இந்த குழு குறிவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் வெடிபொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வன்முறையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

மேலும் அக்குழுவில் உள்ளவர்களுக்கு ஹவாலா முறையில் தாவூத் இப்ராஹிம் பணம் அனுப்புவதாகவும் என்.ஐ.ஏ. அமைப்பின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments