ஓட்டுக்காக சுயேட்சை வேட்பாளர் வழங்கிய போலி தங்க காசுகளால் அதிர்ச்சியடைந்த மக்கள்

0 3063
ஓட்டுக்காக சுயேட்சை வேட்பாளர் வழங்கிய போலி தங்க காசுகளால் அதிர்ச்சியடைந்த மக்கள்

திருப்பத்தூரில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவோடு இரவாக பொதுமக்களுக்கு வழங்கிய தங்க காசுகள் பொய்யானவை என தெரியவந்துள்ளது.

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 36-வது வார்டு கம்பி கொல்லை பகுதியில் போட்டியிட்ட மணிமேகலை என்பவரின் கணவர் துரைபாண்டி, 18-ஆம் தேதி நள்ளிரவில் வீடு வீடாகச் சென்று சுமார் ஆயிரம் தங்க காசுகளை கொடுத்து தன் மனைவிக்கு வாக்களிக்க மக்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

வாக்கு செலுத்திய பின் அந்த காசுகளை நகை கடையில் சோதனை செய்த சிலர், அவை போலியானவை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், சுயேட்சை வேட்பாளரும் அவரது கணவரும் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments