கணவர் இறந்த ஆறாவது மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

0 2847
கணவர் இறந்த ஆறாவது மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை ; போலீசார் விசாரணை

கன்னியகுமரி மாவட்டம் அருமனை அருகே இளம்பெண் தூக்கிட்டு உயிர்விட்டதில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

மஞ்சாலுமூடு பகுதியைச் சேர்ந்த ஜான் பிரைட், 6 மாதங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மனைவி பிந்து, இரு பெண் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

கணவரை இழந்த துக்கத்தில் வாழ்ந்து வந்த பிந்து மாலை வெகு நேரமாக அறை கதவை திறக்காமல் இருந்துள்ளார். சந்தேகமடைந்த உறவினர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது, பிந்து மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments