உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

0 1139

உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில், மாணவர்கள், குடிமக்கள் நாடு திரும்ப வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரமும் படையெடுக்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கும் நிலையில், அங்குள்ள சில பகுதிகளில் அரசு படைகளுக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெறுகிறது.

இந்நிலையில், உக்ரைனில் தங்கியிருப்பதற்கான அத்தியாவசிய பணிகள் ஏதும் இல்லாதவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும், விமான சேவை தொடர்பாக இந்திய மாணவர்கள், உக்ரைனுக்கு தங்களை அழைத்து சென்றவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரகத்தின் சமூகவலைதளங்களில் வெளிடப்படும் அறிவிப்புகளையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments