தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்றது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2096

மிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இதுவரை இல்லாத வகையில் அமைதியாக நடைபெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குடியரசு நாளுக்குத் தமிழகம் சார்பில் உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டுள்ளன. அந்த ஊர்திகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையில் குடிசைப் பகுதி மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டுவதைப் போல் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் மக்களும் ஆர்வம் காட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments