ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து

0 1714
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே எம்.சாண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்புக் கடைக்குள் புகுந்து, மின்கம்பத்தில் மோதிக் கவிழ்ந்தது.

பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கிச் சென்ற அந்த லாரி விஆர்பி சத்திரம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பழைய இரும்புக் கடைக்குள் புகுந்து, அருகிலிருந்த கம்பத்தின் மீது மோதிக் கவிழ்ந்தது.

ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், லாரி மோதியதில் மின் கம்பத்தில் இருந்த ஒரு மின் கம்பி மட்டும் அறுந்து விழுந்தது.

அது எர்த் வயர் என்பதாலும், காலை நேரத்தில் பழைய இரும்பு கடையில் யாரும் இல்லாததாலும் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments