சென்னையில் கள்ள ஓட்டுப்போட முயற்சி - வீடியோ வெளியிட்டு இ.பி.எஸ் புகார்

0 3248

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக வேட்பாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும், சில இடங்களில் விதியை மீறி ஆளும் தரப்பினர் நடந்து கொண்டதாகவும் வீடியோ பதிவுகளை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், வாக்குப்பதிவு குறைந்ததற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது தான் காரணம் எனவும், வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் நடக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments