காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இரு வீரர்கள் உயிர் தியாகம்.!

0 1553

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

இரண்டு ராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். ஷோபியானின் ஜைனாபோரா பகுதியில் உள்ள செர்மார்க் என்ற இடத்தில் பயங்கரவாதி மறைந்திருப்பதாக வந்த தகவலையடுத்து காஷ்மீர் போலீசார், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் மத்திய ரிசர்வ் படையினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, மறைவிடத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் இரு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடியில் தீவிரவாதி கொல்லப்பட்டான். இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments