நடிகர் சுசாந்த் ராஜ்புத்தும், திசா சாலியனும் கொலை செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு.!

0 2460

நடிகர் சுசாந்த் ராஜ்புத்தும், அவரின் மேலாளராக இருந்த திசா சாலியனும் கொலை செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே குற்றஞ்சாட்டியுள்ளார்.

2020 ஜூன் எட்டாம் நாள் இரவில் மும்பையில் 14ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து திசா சாலியன் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூன் 14ஆம் நாளில் சுசாந்த் ராஜ்புத்தின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த இரு மர்ம மரணங்கள் குறித்து மத்திய அமைச்சர் நாராயண் ராணே இப்போது பரபரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளார். திசா சாலியன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதாகவும், இதையறிந்த சுசாந்த் ராஜ்புத், குற்றவாளிகளை விட்டுவிடப்போவதில்லை எனக் கூறியதால் அவரையும் அதே கும்பல் கொன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்குத் தேவைப்பட்டால் தம்மிடம் உள்ள தகவல்களை வழங்கத் தயாராக உள்ளதாகவும் நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments