15-18 வயதுடைய 2 கோடி சிறார்கள் முழு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தகவல்

0 1212

நாட்டில் 15 முதல் 18 வயதுடைய 2 கோடி சிறார்கள் முழுவதுமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 3ஆம் தேதி 15 முதல் 18 வயதினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.

மேலும் நாட்டில் ஒட்டுமொத்தமாக செலுத்தப்பட்ட கொரோனா டோஸ்களின் எண்ணிக்கை 174 கோடியே 99 லட்சத்தை தாண்டியது. இதுவரை ஒரு கோடியே 86 லட்சம் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments