தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ; 4 பேர் பலி

0 2072
தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்றிருந்த லாரின் பின்பக்கத்தில் வேகமாக மோதியதில், காரில் பயணித்த குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் தனது கணவர், குழந்தை மற்றும் சகோதரனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு வேலூரில் உள்ள தங்க கோவிலுக்கு டாடா போல்ட் காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை காதர் பாஷா என்பவர் ஓட்டிச் சென்ற நிலையில், ஐதேபள்ளி நெடுஞ்சாலையில் லாரி நின்றிருந்ததை கவனிக்காத ஓட்டுநர், திடீரென பிரேக் அடித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்பக்கமாக மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், டிரைவர் மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments