ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோஷமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட பயணிகள்.!

0 2644

ஜெர்மனியில் நடுக்கடலில் சென்ற படகு மீது பேரலை ஒன்று ஆக்ரோஷமாக மோதியதில் படகில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

வடக்கு ஐரோப்பாவில் யெலேனியா என்ற புயல் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜெர்மனியில் சொகுசுப் படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது.

அப்போது மணிக்கு 94 மைல் வேகத்தில் காற்று வீசியது. இதில் படகின் மேல்தளத்தில் அடுத்தடுத்து வந்த அலைகள் அதிவேகத்தில் மோதின, இதில் படகில் இருந்த கண்ணாடி உடைந்து நொறுங்கி கடல் நீர் உள்ளே நுழைந்ததில் அங்கு அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments