திருப்பூரில், கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘க்யூ ஆர்’ ஸ்டிக்கர் மீது வேறு ஸ்டிக்கர் ஒட்டி பணத்தை திருடும் மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்.!

0 1979

திருப்பூரில், கடைகளில் பணப்பரிவர்த்தனைக்காக ஒட்டப்படும் ‘க்யூ ஆர்’ ஸ்டிக்கர் மீது வேறு ஸ்டிக்கர் ஒட்டி பணத்தை திருடும் மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதலிபாளையம் சிட்கோவை சேர்ந்த துரைசாமி என்பவரது ஓட்டலில் ஒட்டப்பட்டிருக்கும் க்யூ ஆர் கோடில் வாடிக்கையாளர் ஒருவர் பணம் செலுத்திய போது வேறு ஒருவரின் பெயரை காண்பித்துள்ளது.

இதனை அடுத்து அங்கிருந்த சிசிடிவியை பார்த்த போது நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி வரும் ஒருவர், ‘ஸ்டிக்கர்’ மீது, ’க்யூ ஆரை மட்டும் வெட்டி வேறு ஒரு ஸ்டிக்கரை ஒட்டி செல்வது தெரிந்தது.

இதே போன்று அப்பகுதியில் உள்ள கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளதால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments