தலைநகர் டெல்லியை உலுக்கிய வெடிகுண்டு மிரட்டல்.!

0 1312

தலைநகர் டெல்லியை வெடிகுண்டு மிரட்டல்கள் உலுக்கியெடுத்து விட்டன.

டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 3 கிலோ எடை கொண்ட டைம் பாம் வகையான வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு நிபுணர்கள் உதவியால் செயலிழக்க வைக்கப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காசிபுர் பூமார்க்கெட்டில் வெடித்த குண்டுகளுக்கு நிகராக இந்த வெடிகுண்டு இருப்பதாக தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெடி குண்டை வீட்டில் பதுக்கி வைத்தவர்கள் உத்தரப்பிரதேச டெல்லி எல்லையில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் எல்லைகளை மூடி வாகனங்களை சோதனையிட்டனர்.

இதனிடையே சீமாபுரியில் அடையாளம் தெரியாத பை ஒன்றை கமாண்டோ வீரர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments