முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் கருத்துகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி.!

0 1991

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இந்திய பொருளாதாரம் மற்றும் பிரதமர்மோடி மீது வைத்துள்ள விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவை உலகின் பார்வையில் கீழிறக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு கடுமையாக எதிர்வினையாற்றி உள்ளார்.

இந்தியில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்ட மன்மோகன்சிங், இந்தியப் பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லாமல் பாஜக அரசு செயல்படுவதாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறுவதாகவும் பணக்காரர்கள் மேலும் பணம் சேர்ப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

இதற்கு பதிலடி தந்துள்ள நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரத்தை உலக அரங்கில் உயர்த்திக் காட்டியவர் மோடி என்று கூறியுள்ளார்.

பிரதமராக இருந்த போது 22 மாதங்களாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த மன்மோகன்சிங், முதலீடுகள் இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முடியாத மன்மோகன்சிங் இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்திய மோடியையும் பாஜகவையும் விமர்சிப்பது மனதைப் புண்படுத்துவதாக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments