மும்பையில் ஓடும் ரயில் முன் மகனுடன் பாய்ந்து தந்தை தற்கொலை... பதறவைக்கும் சிசிடிவி காட்சி

0 4039

மும்பையில் ஓடும் ரயில் முன் சிறுவனுடன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ வெளியாகி உள்ளது.

தானே மாவட்டம் விதல்வாடி ரயில் நிலையத்திற்குள் ரயில் நுழைந்த நிலையில் நடைமேடையில் சிறுவனுடன் நின்றிருந்த நபர் திடீரென ரயில் முன் பாய்ந்தார். ரயில் சக்கரத்தில் சிக்கி 2 துண்டாக நபர் உயிரிழந்ததாகவும், தண்டவாளத்தின் பக்கவாட்டில் சிறுவன் விழுந்து உயிர் பிழைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் பிரமோத் என்றும் பெற்ற மகனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments