நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு

0 3272
நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதியின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும், ஆனால் பொதுவெளியில் அவர் தன்னை இழிவுபடுத்தி பேசி தாக்கியதாக நடிகர் மகா காந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை ரத்து செய்ய கோரி விஜய் சேதுபதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பெங்களூரு விமான நிலையத்தில் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சென்னை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என வாதிடப்பட்டது.

இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, விசாரணையை மார்ச் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments