வீடு வீடாக நோட்டமிட்டு பெட்ரோல் திருடிய மர்ம நபர்கள்.. சிசிடிவி காட்சிகளைப் பார்த்து போலீசாரை வரவழைத்த வீட்டு உரிமையாளர்.. தப்பி ஓடிய திருடர்கள்..

0 2294
மயிலாடுதுறையில் மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிடுவதை சிசிடிவி கேமராவில் கவனித்த வீட்டு உரிமையாளர், போலீசாருக்குத் தகவல் அளித்து வரவழைத்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

மயிலாடுதுறையில் மர்ம நபர்கள் வீட்டை நோட்டமிடுவதை சிசிடிவி கேமராவில் கவனித்த வீட்டு உரிமையாளர், போலீசாருக்குத் தகவல் அளித்து வரவழைத்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

பெசன்ட் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்ததால் அப்பகுதி மக்கள் 18 இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொறுத்தினர்.

நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே சத்தம் வருவதை கவனித்த குடியிருப்புவாசி ஒருவர், சிசிடிவி கேமரா காட்சிகளை தனது செல்போனில் பார்த்த போது 3 இளைஞர்கள் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பெட்ரோலைத் திருடியது தெரியவந்தது.

திருடிய பெட்ரோலை தங்கள் வாகனத்தில் ஊற்ற முயன்ற மர்ம நபர்கள், போலீசாரை கண்டதும் தங்கள் இரு சக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments